Tuesday 11 March 2014

ஊட்டி பயணமும் சில நினைவுகளும்




விநாயக முருகனின் ராஜீவ் காந்தி சாலைக்கு மலைச்சொல் விருது வழங்கும் நிகழ்ச்சியை ஊட்டியில் நட்த்தினார்கள். பேச என்னையும் அழைத்தார்கள். பெண்கள் கல்லூரியில் பேச அழைத்தால் எப்படி கண்ணை மூடி ஒப்புக் கொள்வோமோ அது போன்றே உடனடியாய் சரி என்றேன்.
வி.முவும் கூட வருவதாக சொன்னது மற்றொரு காரணம். வி.முவின் குடும்பத்துடன் கோயம்பத்தூர் வரை ரயிலில் போய் அங்கிருந்து ஊட்டி போனோம். வி.மு மிக மிக மென்மையான மனிதராக இருக்கிறார். அவரிடம் ஒரு ஜெண்டில்மேன்தனம் (நல்லவிதமாகத்தான்) உள்ளது. வயதாகி வெண்தாடி நீண்ட்தும் சுந்தர ராமசாமி போல் ஆகி விடுவார் என நினைக்கிறேன். அப்படி ஒரு கண்ணியம். எழுத்தில் உள்ள பகடி, அடாவடித்தனம் எல்லாம் நேரில் இல்லை. ஏதோ ரெட்டைப்பிறவியோ என்று கூட நினைத்தேன்.
வி.முவின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் பயங்கர சுட்டி. சினிமாவில் வருவது போன்று ஒரு perfect குழந்தை. அப்பா அம்மாவை கூட வாங்க போங்க போட்டு பேசும் குழந்தைகளை மிக மிக அரிதாகத் தான் பார்க்க முடிகிறது. இக்குழந்தை அவ்வளவு மரியாதையாக பேசுகிறாள். ஒரு நொடி கூட அவள் சுணங்கி அழுத்தை நான் பார்க்கவில்லை. எப்போதும் சிரிப்பு மகிழ்ச்சி மத்தாப்பு வாணவேடிக்கைதான். அம்மா சொன்னால் உடனடியாய் கேட்கிறாள். அப்பாவை மட்டும் லேசாய் கலாய்க்கிறாள். இன்னும் கூட ஏதோ சினிமா திரையில் இருந்து இறங்கி வந்த கேரக்டரோ என்று சந்தேகம் இருந்து கொண்டிருக்கிறது. அநியாயத்துக்கு கியூட்.

ஊட்டியில் முதல் நாள் எழுத்தாளர் சுமதி ஸ்ரீயும் தன் குடும்பத்துடன் சுற்றுலாவுக்காக வந்திருந்தார். நாங்கள் சேர்ந்து மதிய உணவருந்தினோம். அவரது கணவர் பென்னியை அதற்கு முன் எங்கோ சந்தித்து பேசியது போல் ஒரு அழுத்தமான நினைவு. ஆனால் எங்கே எனத் தெரியவில்லை. பென்னியும் இதே தான் என்னிடமும் சொன்னார். ஆனால் அவர் இலக்கிய கூட்டங்களுக்கு வருபவர் அல்ல. நான் வேலை பார்த்த கல்லூரிகளில் எங்காவது வந்துள்ளாரா எனக் கேட்டேன். இல்லை. ஒருவேளை எனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டோ என சந்தேகம் தோன்றியது. 
Read More

Wednesday 5 March 2014

சாதியும் பொருளாதார போட்டியும் இன்றி வாழ்க்கை சாத்தியமா?





சர்வோத்தமன் இந்த கட்டுரையில் நகர்வாழ் மனிதன் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதற்கு அவன் அமைப்பின், அதாவது அரச நிர்வாக எந்திரத்தின் பகுதியாக, இருப்பதே காரணம் என்கிறார். மனிதன் அமைப்பை விட்டு வெளியேற வேண்டும். அதற்கான ஒரே வாய்ப்பு கிராமிய பொருளாதாரத்தை நோக்கி மீள்வதே என்கிறார். காந்தியை மேற்கோள் காட்டுகிறார்.
Read More

Sunday 2 March 2014

அதிகாரத்தை எதிர்கொள்ளும் இருமுறைகள்: ரஜினியும் பூக்கோவும்



ரஜினியின் மன்னன் படம் ஒட்டாமை கருத்தாக்கத்தை உறவு மற்றும் சமூக படிநிலைகளில் வைத்து விவாதிக்கக் கூடியது. கிருஷ்ணன் (ரஜினி) மீனாவை (குஷ்பு) காதலிக்கிறார்ன். அவனது முதலாளி சாந்திதேவி (விஜயசாந்தி) அவனது அம்மாவை ஏமாற்றி அவனை திருமணம் செய்து தருவதாய் சத்தியம் செய்கிறாள். ஆரம்பத்தில் “திருமணம் என்பது என் தனிப்பட்ட முடிவை சார்ந்தது” என காதலி மீனாவிடம் அறிவிக்கும் கிருஷ்ணன் தன் அம்மாவின் சத்தியத்தை அறிந்ததும் தன் தனிமனிதவாதத்தை கைவிட்டு, அவரிடம் வாதிட்டு உண்மையை புரிய வைக்க முயலாமல் ஒரு வறட்டு புன்னகையுடன் அம்மாவை அணைத்துக் கொள்கிறான். ஒரு சிறு சத்தியம் தானே, அதை கைவிடலாகாதா? ஆனால் ஏற்கிறான். கிருஷ்ணன் தன் மனதுக்குள் “எமாந்திட்டீங்களே அம்மா” என்கிறான். ஆனால் வெளிப்படையாக அம்மாவிடம் கூறாமல் மறைக்கிறான். இந்த படத்தில் உள்ள பல விநோதமான திருப்பங்களில் இதுவும் ஒன்று. நம் வீடுகளில் வளர்ந்த குழந்தைகள் தம் விருப்பங்களுக்காக தொடர்ந்து வாதிட்டு வற்புறுத்தி ஒவ்வொன்றாய் மெல்ல மெல்ல் அடைவதை பார்க்கிறோம். வீடு என்பதே எதோ ஒன்றுக்காய் சதா பேரம் நடக்கும் இரைச்சலான ஒரு இடம் தானே. சின்ன சின்ன நகர்தலுக்கு கூட லாஜிக் யோசிக்கும் தமிழ் சினிமா இயக்குநர்கள் ரஜினியின் பல படங்களில் அவரது பிம்பத்துக்கு மையமான தத்துவ எண்ணங்களுக்காக லாஜிக்கை தயங்காமல் கைவிடுவார்கள். மிகையான செண்டிமெண்டும், வேகவேகமாய் நகரும் காட்சிகளும், ரஜினியின் ஆளுமைத் தாக்கமும் ரசிகனை அதிகம் யோசிக்கவும் விடுவதில்லை. ஆனால் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இங்கே ரஜினியின் உணர்ச்சியற்ற போக்கு தான்.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates