Showing posts with label ஏசாப் நீதிக் கதை. Show all posts
Showing posts with label ஏசாப் நீதிக் கதை. Show all posts

Saturday, 14 January 2012

ஒரு போட்டி



 விநோதமாக ஒரு மனிதனும் சிங்கமும் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள். இயல்பாகவே இருவருக்கும் போட்டி ஏற்பட்டது. மெல்ல மோதலாகியது. இப்படி தொடர்கையில் ஒருநாள் அவர்கள் ஒரு சிற்பத்தை கண்டார்கள். அதில் ஒரு சிங்கத்தின் குரல்வளையை ஒரு மனிதன் நெறித்து கொண்டிருந்தான். மனிதன் சொன்னான் “பார் மனிதனின் வலிமையை பார். அப்போது சிங்கம் சொன்னது “ப்பூ இதென்ன பெரிய விசயம்... நாங்கள் சிற்பம் வடித்தால் ஒரு சிங்கத்தின் காலின் கீழ் 20 மனிதர்கள் நசுங்கிக் கொண்டிருப்பார்கள்.

வரலாறு வெற்றியாளர்களால் எழுதப்படுகிறது
(ஏசாப் நீதிக்கதை)

சில அதிகார அசடுகளின் அடாவடித்தனங்களை பார்க்கும் போது நினைவு வந்த கதை

Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates