நவீன பெண்களைப் போலவே நவீன கவிதைகளும் உள்ளடக்கத்தில் குழப்புவனவாகவும் ஏமாற்றம் தருபவையாகவும் இருப்பது நமக்கு பரிச்சயமானது தான். பத்திரிகைகளில் கவிதைப் பக்கங்களை எங்கே சுட்டு விடுமோ என்ற அச்சத்தில் புரட்ட நேரிடுவது கவிஞனுக்கும் வாசகனுக்கும் இன்று ஒருசேர ஆபத்து தான். இந்த நெருக்கடி வாசிப்பு நிலையில் சில கவிதைகள் வண்ணமடித்த கோழிக் குஞ்சுகளாக தெரிகின்றன. ஒன்று செல்மா ப்ரியதர்சனின் “பூனையிடம் மன்றாடும் ஆசிரியர்”. மிக அரிதான ஒரு நவீன நகைச்சுவை கவிதை. மொழியில் புதுமையும் கூர்மையும் உள்ளது. வகுப்பறையில் நடக்கும் ஒரு வன்முறையை நுட்பமாக அலட்டாமல் சொல்கிறது. பிப்ரவரி மாத தீராநதியில் 32வது பக்கத்தில் உள்ளது. வன்முறை நகைச்சுவை எனும் இரு எதிர் துருவங்களில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்கலாம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment