Saturday 18 December 2010

இந்தியா ஏன் வெல்ல வேண்டும்?


தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் டெஸ்டு ஆட்டத்தில் இந்தியாவால் ஆட்டத்தை காப்பாற்ற முடியும் மற்றும் வெல்லக் கூட முடியும் என்று மீடியா விமர்சகர்கள் நம்பத் தொடங்கி உள்ளனர். இதற்கு காரணம் எந்த ஒரு கிரிக்கெட் தர்க்கமோ விவேகமோ அல்ல.
இன்று ஒரு செஷன் நமது துவக்க ஆட்டக்காரர்கள் நேர்மறையாக ஆடி தாக்குப்பிடித்து ஓட்டம் எடுத்தது தான். தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தும் ஒரு சிறுவனைப் போல் நம் மீடியா உடனே பரபரப்பாகி விட்டது. இந்த மனப்போக்கின் அடிப்படையில் ஒரு அசட்டுத் தனம் உள்ளது.
முதலில், கிரிக்கெட் எண்களின், முடிவுகளின் ஆட்டம் அல்ல. வெற்றி தோல்விகளை விட பார்வையாளர்களின் நினைவில் நிற்பவை உயர்ந்த மனிதப் பண்புகளை சோதித்த காவிய ஆட்டங்களே. உதாரணமாய் 2000இல் இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் டெஸ்டு ஆட்டங்கள். அதற்கு பின் அவர்கள் திரும்ப வந்து ஜெயித்தார்கள். அடுத்து இருமுறை வந்து தோற்றார்கள். ஆனால் நம் கற்பனையை கவர்ந்தவை கொல்கத்தாவிலும், சென்னையிலும் நடந்த அந்த தராசு முள் ஆட்டங்கள். ஏன்? கிரிக்கெட் ஆடுகளம் ஒரு போராட்டத்தை, அபார பொறுமையை, அதிர்ஷட்டத்தின் குரூர சாய்வுகளை, உடல்ரீதியான சாகசங்களை, இறுதியாய் தனிமனித ஆற்றல்களை அழகியல் பூர்வமாய் நிகழ்த்திக் காட்டும் ஒரு மேடை. மனிதனின் சிலுவை விளைவுகள் பற்றின கவலை தான். கிரிக்கெட்டில் இந்த சிலுவையில் அறையப்பட்ட எந்த அணிக்கும் உயிர்த்தெழுப்பு இல்லை. மேற்சொன்ன ஆஸ்திரேலிய டெஸ்டுகளை போல் மிகச் சிறந்த காவிய ஆட்டங்கள் வெற்றி தோல்விகளை கடந்தவை.
இனிவரும் இரண்டு நாட்களுக்கு இந்தியா தாக்குப் பிடிக்காவிட்டால் என்ன என்று நாம் கேட்க வேண்டும். இந்த தொடரில் மீண்டு வர இந்தியாவுக்கு எப்போதும் வாய்ப்பிருக்கும். இத்தொடரின் முடிவு என்னவாக இருந்தாலும் அடுத்த தொடருக்குள் மறந்து விடுவோம். இங்கிலாந்திலும் மே.இ தீவுகளிலும் நாம் டெஸ்டு தொடர்களை வென்றுள்ளதை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறோம். உயர் மனிதப் பண்புகளை காட்சிப்படுத்துவது தான் இத்தொடரின், எந்த டெஸ்டு தொடரின்,  முக்கிய லட்சியமாக இருக்கும். எந்த நொடிய்ல் இருந்து இந்தியா இந்த ஆட்டத்தை காப்பாற்றுவது பற்றி யோசிக்க ஆரம்பிக்குமோ அப்போதில் இருந்து அவர்கள் ஏறுவது ஒரு வழுக்கு மரமாகத் தான் இருக்கும்.
இப்படியும் யோசிக்கலாம். இயற்கை விதியின் படி யார் இந்த ஆட்டத்தை வெல்ல தகுதியானவர்கள். இதுவரை குறைவான தவறுகளே செய்துள்ள தென்னாப்பிரிக்கர்கள் தாம். ஆக இந்தியா கடிகார முள்ளை திருப்பி விட முயலாமல் இந்த நிலைமை சகஜமாக நடைமுறை ஞானத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். மட்டையாளர்கள் ஆளுக்கு சதமோ அரை சதமோ அடித்து தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். அடுத்து வரும் ஆட்டங்களுக்கு தம்மை தயாரிக்க முயலவேண்டும். ஒரு வேளை இந்த ஆட்டத்தை காப்பாற்ற முடிந்தால் அது ஒரு உபரி வெகுமதி மட்டும் தான். இரண்டு நாள் ஆட்ட வரலாற்றின் பாரத்துடன் ஆடினால் இந்தியாவால் நாளை மதியம் வரை கூட தாக்குப் பிடிக்க முடியாது.
தென்னாப்ப்ரிக்கா இரண்டு தவறுகளை செய்கிறது. ஒன்று அவர்கள் கறுப்பின சலுகை தேர்வு. இது சமீபமாக பெரும் சர்ச்சையை தோற்றுவித்து வந்த ஒன்று. தென்னாப்பிரிக்க அணியில் தகுதியை மீறி கறுப்பர்களுக்கு ஒதுக்கீட்டை வழங்க அரசு நெருக்கடி கொடுக்கிறது. இது தற்போது ஒரு மறைமுக கொள்கையாக உள்ளது. டூமினி நீக்கப்பட்டால் அந்த இடத்திற்கு ஆஷ்வல் பிரின்ஸ் எனும் மற்றொரு கறுப்பர் வருகிறார். நித்தினி எனும் வேக வீச்சாளர் ஓய்வு பெற்ற பின் அந்த இடத்திற்கு சொட்சொபெ எனும் மற்றொரு சுமார் ரக கறுப்பரான வீச்சாளர் கொண்டு வரப்படுகிறார். அவரால் நடந்து வரும் ஆட்டத்தில் எந்தவொரு பாதிப்பையும் மட்டையாளர்கள் மீது ஏற்படுத்த முடியவில்லை. வேடிக்கை என்னவென்றால் அவர் பந்து வீசும் முன்னரே அவர் மொத்தமாக இந்த ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளாவது எடுக்க வேண்டும் என்று அணியில் 11 பேருமே பிரயத்தனப்படுகிறார்கள். அணித்தலைவர் ஸ்மித்துக்கும் சொட்சொபேவின் வெற்றி ஒரு தனி அழுத்தமாகவே உள்ளது. அவர் அணியின் வெற்றிக்கு நிகராக சொட்சொபேவின் நிலைப்பையும் வேண்டுகிறார். அந்த அழகான பெயரைத் தவிர சொட்சொபேவிடம் விசேசமாக ஒன்றும் இல்லை. முன்பு குரோன்யேவின் குற்றமன்னிப்பு பரபரப்பில் சில தலைகள் உருண்ட போதும் கிப்ஸ் இந்த இன ஒதுக்கீட்டு பரிவினாலே அணியில் பாதுகாக்கப்பட்டார். தென்னாப்ப்ரிக்கா போன்ற ஒரு சீரிய அணியில் அரசியல் தான் ஒரே கோளாறு. ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதும் இதன் அடிப்படையில் அணித்தலைமையும் தேர்வாளர்களும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி சுமப்பதும் மாபெரும் கிரிக்கெட் வேடிக்கைகளில் ஒன்று. சமூக அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் இருந்தாலும் கிரிக்கெட்டில் நிச்சயம் இல்லை. கிரிக்கெட்டில் ஒரு நிறபேதம் மட்டும் தான். அது பந்தின் நிறம்.
Share This

2 comments :

  1. பார்ப்போம் .. டிராவிட் நின்னா வாய்ப்பு

    ReplyDelete
  2. இந்தியா ஆட்டத்தை காபாற்றுவது திராவிட் லக்ஷுமணன் கையில் தான் உள்ளது

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates