Thursday 15 October 2009

கதை சொல்ல வாழ்கிறேன்: காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (அத்தியாயம் 4)



மனச்சமநிலையோடு அந்த கொடுமையான பயணத்தை அவள் தாங்குவதைக் கண்டு, இத்தனை வேகமாயும் தேர்ச்சியுடனும் வறுமையின் அநியாயங்களை எப்படி அவளால் கீழ்ப்படுத்திட முடிந்தது என நானே கேட்டேன். அந்த அதிபயங்கர இரவு அவளது உச்சகட்ட பொறுமையையும் சோதித்தது.
ரத்தவெறி பிடித்த கொசுக்கள், அடர்த்தியான வெப்பம், கடந்து செல்லும் எந்திரப் படகு கடைந்ததில் கால்வாய் சகதியிலிருந்து கிளம்பிய குமட்டச் செய்யும் வாடை, பிதுங்கும் கூட்ட நெரிசலில் இடம் கிடைக்காத தூக்கமற்ற பயணிகளின் குறுக்கும் நெடுக்குமான வெறிகொண்ட அலைச்சல் --- மிகச்சிறந்த நடுநிலை மனஇயல்பு கொண்டவரையும் கலங்கடிக்க இவை போதும் என்று தோன்றியது. வாடகைக்கான பெண்கள், ஆண்களைப் போலவோ மெனோலஸாகவோ ஆடை அணிந்து, கோலாகலக் கொண்டாட்ட அறுவடையை அருகிலுள்ள சிற்றறைகளில் கொய்திட, அம்மா எல்லாவற்றையும் தாங்கி தன் நாற்காலியில் அசைவற்று அமர்ந்திருந்தாள். அவர்களில் ஒருவள் ஒவ்வொரு முறையும் புது கிராக்கியுடன் என் அம்மாவின் நாற்காலிக்கு அடுத்திருந்த தன் சிற்றறைக்குள் பலமுறை போய் வந்தவாறு இருந்தாள். அம்மா அவளை பார்த்திருக்கவில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால் ஒரு மணிநேரத்தில் நான்காவது அல்லது ஐந்தாவது முறையாக அவள் நுழைந்து வெளியேறிய போது, அம்மா பாதை முடிவு வரை தன் பார்வையாலே இரக்கத்துடன் அவளைத் தொடர்ந்தாள். "பாவப்பட்ட சென்மங்க", பெருமூச்சு விட்டவாறு அவள் சொன்னாள், "வாழ்க்கைப் பாட்டுக்கு அவர்கள் செய்ய வேண்டியது வேலை பார்ப்பதை விட மோசமானது".
நள்ளிரவு வரை நிலைமை இப்படித்தான் இருந்தது; தாங்க முடியாத அதிர்வும், வழிப்பாதையின் மங்கிய வெளிச்சமும் காரணமாய் வாசித்து நான் சோர்ந்து விட, யோக்னாபடாவபா கவுண்டியின் புதைமணல்களில் இருந்து என்னை விடுவிக்க முயன்றவாறு, அவளருகே புகைபிடிக்க அமர்ந்தேன். பெர்னாட்ஷாவில் நான் படித்துள்ளதாய் நம்பும் "மிகச்சிறு வயது முதலே என் கல்வியை பள்ளிக்கு போகும் பொருட்டு தற்காலிகமாய் நிறுத்த வேண்டியிருந்தது" எனும் ஒரு சொற்றொடரால் ஊக்கம் பெற்று பத்தி¡¢கைத்துறை மற்றும் இலக்கியத்தை பற்றி ஏதும் கற்றறியும் அவசியமின்றி அவற்றைக் கொண்டு வாழ்க்கைப்பாட்டை ஓட்டி விடலாம் என்ற குருட்டாம்போக்கு நம்பிக்கையுடன், ஒரு வருடம் முன்பு பல்கலைக்கழகத்தில் இருந்து நின்று விட்டிருந்தேன். இதற்கான காரணங்கள், அவற்றை எப்படி விளக்குவது என்று எனக்கு தொ¢யவில்லை என்றாலும், எனக்கு மட்டுமே தோதாக இருக்கும் என்று தோன்றியதால் அவற்றைப் பற்றி யா¡¢டமும் விவாதிக்க முடியவில்லை. என்னிடம் நிரம்ப நம்பிக்கை வைத்திருந்து, தங்களிடம் இல்லாத காசையும் எக்கச்சக்கமாய் செலவழித்துள்ள என் பெற்றோர்களிடம் இத்தகைய ஒரு கிறுக்குத்தனத்தை பற்றி நம்பிக்கை ஏற்படுத்துவது நேரத்தை விரயம் செய்வதாகும். குறிப்பாக, தன்னால் அடைய இயலாத, ஒரு கல்விச்சான்றிதழை சுவற்றில் தொங்கவிட இல்லை என்பதைத் தவிர வேறெதற்காகவும் அப்பா என்னை மன்னித்திருப்பார். எங்களிடையே பேச்சுவார்த்தை தடைபட்டிருந்தது. ஏறத்தாழ ஒரு வருடத்துக்குப் பின் அம்மா தோன்றி வீட்டை விற்க அவளுடன் செல்லுமாறு என் அழைக்கும்வரை அவரை சந்தித்து என் காரணங்களை விளக்க ஊருக்கு செல்வது பற்றி நான் திட்டமிட்டபடிதான் இருந்தேன். நள்ளிரவில் இரவுணவின் போது, ஏதோ அசா£¡¢ கேடட்து போல் என்னிடம், நிஜமாகவே, காரணத்தை சொல்ல வேண்டிய தருணம் வந்து விட்டதாய் அவள் உணரும் வரை இந்த சமாச்சாரத்தை நான் குறிப்பிடவே இல்லை; புறப்படும் முன்பான தூக்கமற்ற இரவுகளின் தனிமையில் அவளுள் முதிர்ந்து பழுத்த முறை, தொனி மற்றும் துல்லியமான வார்த்தைகளுடன் ஆரம்பித்தாள்.
"உங்கள் அப்பா வருத்தமாக இருக்கிறார்”, அவள் சொன்னாள்.

சா¢தான், ஆரம்பித்தாகிவிட்டட்து. நான் மிகவும் பயந்த நரகம். அவள் எப்போதும் போலவே ஆரம்பித்தாள். நாம் ஒருபோதும் எதிர்பார்த்திராத போது, சற்றும் பதற்றம் கொள்ளாத ஆறுதலான் குரலில். என்ன பதில் வரும் என்பது மிக நன்றாக தொ¢ந்திருந்ததால், சம்பிரதாயமாக மட்டும் கேட்டேன்:
"ஏன் அப்ப்டி"
"ஏனென்றால் நீ படிப்பை நிறுத்தி விட்டாய் அல்லவா"
"நான் படிப்பை நிறுத்தவில்லை", நான் சொன்னேன்
"நான் வேலையை மட்டும் தான் மாற்றினேன்"
ஒரு முழுமையான விவாதத்துக்கான சாத்தியம் என் உற்சாகத்தை தட்டி எழுப்பியது.

Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates