Wednesday 14 October 2009

காமம் - பொய் - வீடியோ சுருள்

சாய் பாபாவின் திகிடுதித்தங்களை விளக்கி அவருடன் ஒருகாலத்தில் நெருங்கிப் பழகின ஜி.ஆர் பாபு எழுதின இந்த அதிர்ச்சியூட்டும் கட்டுரையை மூன்று வருடங்களுக்கு முன் தமிழாக்கி புதிய காற்றில் பிரசுரித்தேன். இரண்டு பிரதிகளாக வெளியாயின. முதல் பகுதியின் மென்பிரதி கிடைக்கவில்லை. அதனால் இரண்டாம் பகுதியை மட்டும் இங்கே தருகிறேன். முதற்பகுதி இல்லாமலும் புரியும். முக்கியமான கட்டுரை.



வெளிறிப்போன முகத்துடன், வெளிநாட்டவர் ஒருவர் வந்து பாபவை ஏற்றுக் கொண்டு விட்டால், பின் ஐயப்பட ஒன்றுமில்லை. தேசிய வானொலியும், தொலைக்காட்சியும் பாபாவுக்காக பிரச்சாரம் செய்கின்றன. பத்திரிகையாளர்கள் ஏமாளிகளாகவோ, விலைக்கு வாங்கப்பட்டவர்களாகவோ உள்ளனர்.

“அங்கே ஒரு நெக்லஸ் தோன்றக் கடவாக”

ஆனால் ஒரு விசுவாசியின் சந்தேகத்திற்கு கண் கூடாகவே தீவனமிடுவது டெக்கான் குரோனிக்கல். 1992, நவம்பர் 23 அன்று சத்யசாயி பாபாவுக்கு வழங்கிய நூதன பிறந்த நாள் பரிசாகும். அதி எண்ணிக்கையில் விற்பனையாகும் ஐதராபாத்தைச் சார்ந்த இந்த ஆங்கில நாளிதழ் ஒரு பகுத்தறிவுவாதியின் கனவு என்று மட்டுமே வர்ணிக்கத்தக்க ஒன்றை பிரசுரித்தது. இந்திய பிரதமர் திரு.பி.வி.நரசிம்மராவின் முன்னிலையில் சத்யசாயி பாபா தங்க நெச்லஸ் ஒன்றை உருவாக்கியதன் படப்பிடிப்பும் புகைப்படங்கள் முன்பக்கத்தில் பெருமளவு இடம் பிடித்தன. இந்த படப்பிடிப்புச் சுருள், சத்யசாயி பாபா கை வீசி “வருவிக்கும்” நெக்லேசை முன்னரே அவருக்கு அவரது தனிப்பட்ட உதவியாளர் ராதகிருஷ்ண மேனன் ரகசியமாய் கைமாற்றுவதை தெளிவாகக் காட்டுகிறது.

பிரதமரை பதிவு செய்த மாநில குழு ஒன்றால் படம் பிடிக்கப்பட்ட இதன் காசெட் மறைக்கப்பட்டது. ஆயினும், ஒரு பிரதி வெளியாகிட, பல பிரதிகள் தொடர்ந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் விநியோகிக்கப் பட்டன. தீரமிக்க அந்த பத்திரிகையாளர் வேணு கொடிமேளாவை பாராட்டும் விதமாய் ஒரு பெரிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் நீண்ட காலமாய், எங்களுடைய பொதுக் கூட்டங்களின் போதெல்லாம், இந்த படக்காட்சிகளை பார்ப்பது ஒரு கட்டாயச் சடங்காய் மாறியது. வட்டார மற்றும் மாநில கம்பி தெலைக்காட்சியில் சில காட்சிகள் காட்டப்பட்டன. சில பகுத்தறிவாளர்களின், அவர்கள் பிற்பாடு உணர்ந்தது போல், உடலுக்கு பெரும் தீங்கு நேரும் விதமாய் ஆயினும் புட்டபர்த்திக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையை இந்த விளம்பரம் குறிப்பிடும்படியாய் பாதித்தது. இருப்பினும், பாபா தான் புரியும் நல்ல விஷயங்களை நோக்கி மக்களை கவர்வதற்காகவே “அதிசயங்களை” நிகழ்த்துவதாகவும், அவர் எப்போதும் தன் தனிப்பட்ட சக்திகளை பற்றி பிரகடனம் செய்ததில்லை என்று சிலர் இன்னும் கூட அழுத்திக் கூறுகின்றனர்.

மிக மோசமான திருப்பம் ஒன்று 1993, ஜுன் 6 அன்று காத்திருந்தது. சத்யசாயி பாபாவின் படுக்கையறையில் பிரசாந்தி நிலைய வாசிகளான ஆறுபேர்கள் கொல்லப்பட்டனர். இருவரை கொலைகாரர்களே கொன்றதாய் சொல்லப் பட்டது; காவல் துறையினர் கத்தி மட்டுமே ஏந்திய நான்கு கொலைகாரர்களை சுயபாதுகாப்பு கருதி கொன்றதாய் அறிவித்தனர். தனக்கு நேரப்போகும் ஆபத்தை உணர்ந்த பாபா தன்னுயிரைக் காப்பாற்ற ஓடினார்; திறந்த ஜன்னல் வழி குதித்து வெளியேறி, பிரசாந்தி நிலையத்திற்கு மிகப் பரிச்சயமான வர்கள் கூட அறிந்திராத, ரகசிய அபாய அறிவிப்பொலியை இயக்கினார். படப்பிடிப்பில் பாபாவுக்கு ரகசியமாய் நெக்லசை கைமாற்றிய அவரது தனிப்பட்ட உதவியாளரான ராதா கிருஷ்ணன் மேனனையும் சேர்த்து, கொலை செய்யப்பட்ட அனைவரும் பாபாவின் உள் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கவனத்திற்குரியது.

பாபாவே தனது குரு பூர்ணிமா உரையின் போது, இம்மரணங்களைக் குறிப்பிட்டு தனக்கு நெருக்கமானவர்களின் மரணம் தவிர்க்கத் தக்கதா என்ற கேள்வியைக் கையாண்டார்: “ஜனனமும், மரணமும் சேர்ந்தே செல்பவை. மரணம் ஒரு இயற்கை நிகழ்வு, அதையெண்ணி நாம் கவலையுறக் கூடாது என்பதை நாம் உணர வேண்டும்... சுவாமியின் உயிர் அவர் கையிலே உள்ளது, வேறெவரிடமும் அன்று என்பதை குறித்துக் கொள்ள வேண்டும். நான் வேண்டும் வரை என்னால் வாழ முடியும். சர்வ வல்லவனாய் இருப்பதாலேயே இறைவன் தன் எண்ணம் போல் இயங்க முடியாது. இவ்வுண்மையை உணராமல், லௌகீக வாழ்வை பின்பற்றும் மனிதர்கள் கடவுள் ஏன் சில சூழ்நிலைகளில் தன் முடிவற்ற சக்தியை பயன்படுத்தி எதிர்பாராத, தேவையற்ற சம்பவங்களை தவிர்க்கவில்லை என்பது போன்ற கேள்விகளைக் கேட்கிறார்கள். .”

பாபாவைக் கொல்ல முயற்சி என்பதிலிருந்து பிரசாந்தி நிலையத்தினுள் நிகழ்ந்த உள் சச்சரவாக இருமுறை காவல்துறை அறிக்கை மாற்றி எழுதப்பட்டது. மர்மமான முறையில், இந்திய ஜனாதிபதி சங்கர் தயால் ஷர்மா, நடைமுறை யிலிருந்தும், நன்னடதையில் இருந்தும் பிறழ்ந்து, இந்த மரணங்கள் “ஒரு பெண்” சம்பந்தப்பட்டவை என்றார். ஏன் என்ற கேள்வி எழுந்த போது, நிறுவனத் தலைவரான சத்யசாயி பாபா விசாரிக்கப் படவில்லை. சத்யசாயி பாபவை இருமுறை சந்தித்த உள்துறை அமைச்சர் சவான் கொலை நடந்த நேரத்தில் சாய்பாபா அங்கிருக்கவில்லை என்று வழக்கை மேலும் சமரசப்படுத்தினார். ஆச்சரியமாக, பிரசாந்தி நிலைய அதிகாரிகள் தாமாக எந்த புகாரும் காவல்துறையிடம் அளிக்கவில்லை. மந்திர வித்தைக்காரரும், பாபாவின் முன்னாள் பக்தரும், இந்தியாவிலுள்ள மிக முக்கிய ஆஸ்திகரும், பாபாவின் வாழும் கேலி விமர்சகருமான பி.பிரேமானந்த் விசாரணையின் போதன இந்த குறுக்கிடலை ஏற்றுக் கொள்ளாமல் காவல்துறை திட்டமிட்டு சாட்சியங்களை அழித்தாய் அரசை நீதிமன்றத்திற்கு இழுத்தார்.

வேடிக்கையாக, முன்னொரு முறை தங்க ஆபரணங்களை பக்தர்களுக்கு “சிருஷ்டித்து” அளிப்பதன் மூலம் சத்யசாயி பாபா தங்க உற்பத்தி, உடைமை, விற்பனை மற்றும் இடமாற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தங்க கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியதாய் பிரேமானந்தும், பகுத்தறிவு வக்கீலான கெ.என்.பாலகோபாலனும் அவர் மேல் நீதி மன்றத்தில் புகார் அளித்தனர். விண்ணப்பத்தை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதியும், சத்யசாயி உள்வட்ட உதவியாளருமான ஒய்.வி.அஞ்சனயேலு, ஆன்மீக சக்தியால் ஒரு பொருளை உருவாக்குதல் உற்பத்தியோ, தயாரிப்போ, மறுவடிவமைப்போ ஆகாது என்றார். அநேகமாக, சட்ட நீதி வரலாற்றில் முதன் முறையாக ஆன்மீக சக்தி சட்டபூர்வ சாட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால், இந்த தற்போதைய வழக்கில் நீதி கிடைக்கும் விதம் வழக்கை நடுநிலை விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டும் என்று பிரேமானந்த் உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். உயர்நீதி மன்றத்தில், கோரிக்கையை தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி மிஷ்ரா சத்யசாயி பாபாவை அவதூறு செய்யும் விதமாய் நீதிமன்றத்தை மறுமுறை பயன்படுத்தினால் தண்டிக்கப் போவதாய் பிரேமானந்தை மிரட்டினார். தன் பகுத்தறிவு மனத்திடத்தை கொண்டாடும் விதம், உயர்நீதிமன்றம் ஜனவரியில் இந்த கருத்துக்களை மறுத்து ஒதுக்கியது. உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான ஆந்திர மாநில மேல்நீதி மன்றமும் மே முதல் வாரத்தில் அரசிற்கும், காவல்துறைக்கும் எதிராக பிரேமானந்த் தொடுத்த நீதிமன்ற அவமான வழக்கை ஏற்றுக் கொண்டது. பிரேமானந்தும், சத்யசாயி பாபாவும் பத்திரிகைகளின் முதற்பக்கங்களில் மீண்டும் இடம் பிடித்தனர்

இந்தியாவின் நீதிமன்ற மனநிலை கடந்த சில மாதங்களில் குறிப்பிடும் படியாய் மாறியுள்ளது. இந்திய உச்சநீதிமன்றம் தன் “கைகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை” மூலம் பல ஊழல் அரசியல்வாதி களை கைது செய்தது. இந்திய பிரதமர் நரசிம்மராவை வலியுறுத்தி அவரது விருப்பத்திற்குரிய சாமியாரும், ஆயுத விற்பனைத் தரகருமான சந்திராசாமியையும் மே முதல் வாரத்தில் கைது செய்தது. பகுத்தறிவாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். . .

2000 மில்லியன் இந்திய ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு அனைவருக்கும் இலவச சிகிச்சை அளித்து வரும் சத்யசாயி மேல்நிலை மருத்துவ அறிவியல் கல்லூரி சார்ந்த அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை மராத்தி மொழி வார இதழான “லோக் சபா” 1996, ஜனவரி 19 அன்று பிரசுரித்தது. மகாரஷ்டிர மாநில லாத்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான திரியாம்பக் கர்வந்தே தன் மகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகம் பொருத்தினார். அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரமான பின், இறக்கும் நிலையிலிருந்து திரியாம்பக்கின் சிகிச்சை தோல்வி அடைந்து விட்டதாய் கூறப்பட்டு, தந்தையும், மகனும் வீட்டிற்கு திருப்பி அனுப்பப் பட்டனர். ஊரில் மகாராஷ்டிர மருத்துவ அறிவியல் கல்லூரியில் டாக்டர்.கஸ்தூர் இரு ஸ்கான்களும் சோனோகிராபியும் செய்து திரியாம்பக்கிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே செய்யப் படவில்லை என்று கண்டறிந்தார். அது மட்டுமல்ல, பாலாஜியின் சிறுநீரகம் களவாடப் பட்டுள்ளது என்பதை ஸ்கான்கள் உறுதி செய்தன. பாலாஜியின் சிறுநீரகம் எங்கே போயிற்று? இதுவரையிலும் பெரும்புகழ் வாய்த்திருந்த இந்த மருத்துவமனை ஒருவேளை சர்வதேச உறுப்பு திருட்டு வியாபாரத்தின் பங்காளியோ? குற்ற மிழைக்கப் பட்டவரின் ஆரம்பப் புகார்கள் புறக்கணிக்கப் பட்டன; ஆனால் மகராஷ்டிர மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு தனது தனிப்பட்ட விசாரணைக்குப் பின் கர்வந்தே குடுபத்திற்கு நீதி உதவி கிடைக்க முயன்று வருகிறது. உண்மை விரைவில் வெளியாகும்.

இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் போலி அதிசய புலப்படத்தல் ஆலோசகரும், “இந்திய ஆஸ்திகனின்” ஆசிரியருமான பி.பிரேமானந்த், சாயியின் சொத்து மதிப்பு 60,000 மில்லியன் ரூபாய் என்கிறார். புட்டபர்த்தியில் இப்போது ஒரு விமான நிலையமும், வருகை தரும் பணம் கொழித்த அமெரிக்கர்கள், ஸகாந்திநாவியர்கள், பெல்ஜியர்கள், ஜெர்மனியர்கள், டச்சுக்காரர்கள், மலேசியர்கள், ஜப்பானியர்கள் ஆகியோர் வாடகைக்கு தங்குவதற்கான 3000 சிறு குடியிருப்புகளும் உள்ளன. 10,000 பேர்களுக்கு ஒரே நேரத்தில் உணவு அளிப்பதற்குப் போதுமான உள்கட்டு மானத்தை பிரஷாந்தி நிலையம் கொண்டுள்ளது. இந்தத் தகவலை கணக்கிலெடுத்துக் கொண்டால் போதும்: 1982ல் சத்யசாயி சங்கத்தின் இலக்கு 6000 கிராமங்களை, அங்குள்ள சமுதாயங்களின் உடல், ஆன்மீகத் தேவைகள் நிறைவேற்றும்படியாய், தத்தெடுப்பது ஆகும். இந்தியாவில் 3000 சத்யசாயி மையங்கள் உள்ளன. 85 வெளிநாடு களில் 400 மையங்கள் உள்ளன. ஸ்ரீசத்யசாயி பால் விகாஸ் அறக் கட்டளை நடத்தும் மையங்களில் 1,00,000 குழந்தைகள் இலவசமாக பயிற்றுவிக்கப்படும் செய்தியை அவர்கள் விம்பரப்படுத்தி விற்பனை செய்கிறார்கள். மேலும் அவர்கள் தங்கள் சமூக சேவை நடவடிக்கைகள் பற்றி பிரச்சாரமும் செய்கிறார்கள். மாநிலத்திற்கு சொந்தமான யூனியன் பேங்க் ஆப் இந்தியா சத்யசாயி பாபாவிற்கு பணம் மாற்றுவதற்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை; பணம் தொடர்ச்சியாக கொட்டுகிறது.

சத்யசாயி பாபா தன் 70வது பிறந்த நாளை 1995, நவம்பரில் கொண்டாடிய போது இந்திய ஜனாதிபதியும், பிரதமரும் ஆஜராகி, வறண்ட மாவட்டமான ஆனந்த்பூரின் ஒவ்வொரு கிராமத்திற்கும் குடிநீர் வழங்கும் சத்யசாயி தண்ணீர் திட்டத்தை கைதட்டி வரவேற்றனர். உண்மைத் தகவல் என்னவெனில், கீழ்த்தர கட்டுமானப் பொருட்கள் ஊழல் காரணமாய் பயன்படுத்தப் பட்டமையால் தொட்டிகள் உடைந்தன, குழாய்கள் வெடித்து முடிந்த பின் இன்று வரையிலும் கிராமக் குழாய்களில் தண்ணீர் வந்தபாடில்லை. அரசு தன் கடமையிலிருந்து தவறும்போது, மத நிறுவனங்கள் அவ்விடத்தை எவ்வாறு பற்றிக் கொள்ளும் என்பதற்கு இது ஒரு முக்கிய உதாரணம். அவரது பிறந்த நாளின் போது மட்டும் ஊர் பேரற்ற அமெரிக்க மற்றும் ஜப்பானிய தர்ம ஸ்தாபனங்கள் 1600 மில்லியன் இந்திய ரூபாயை (45 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) சத்யசாயி தர்ம வேலைக்காக நன்கொடை வழங்கியது. இது ஒருவேளை பணக்கடத்தலோ என்ற கோணத்தில் பிரேமாந்த் விசாரித்து வருகிறார்.

பள்ளிப் படிப்பை பாதியில் துறந்த சத்யசாயி பாபாவின் உலகியல் பார்வையை சற்று பரிசீலித்தால் அவர் பாணியிலான தானதர்மத்தையும், கல்வியையும் ஏன் எதிர்க்க வேண்டும் என்பது புரியும். “மையத்தில் (உலகின்) எல்லாமே ஜலம், எல்லாமே உருகியுள்ளது. தட்ப வெப்பமில்லை. தஞணர் போல் எல்லாம் ஜலவடிவில். தங்கம், இரும்பு, வெள்ளி அனைத்தும் ஜலமாய். இதன் பின் திடப்பொருள், பிறகு மரங்கள், பின் மானிடர்களும், மிருகங்களும், மையத்தில் இருப்பதே இறை. அவனே அனைத்திற்கும் ஆதாரம். முதலில் ஜலம், வேதியியல். பிறகு திடப்பொருள், இயற்பியல். பின் மரங்கள், தாவரவியல். பிற்பாடு மனிதன், வாழ்வின் உச்சநிலை. ஆனால் மையத்தில் அனைத்திற்கும் ஆதரமாய் இறை உள்ளது. இறையற்று ஏது வேதியலும், இயற்பியலும், தாவரவியலும்? இதைப் போன்றே இந்த பல்கலைக் கழகத்தில் அனைத்துப் பாடங்களும் பயிற்றுவிக்கப்படும்”. இந்தியாவிலுள்ள பிற உயர்கல்வி மையங்களுக்கு இணையாக சத்யசாயி உயர்கல்வி நிலையம் நிகர்நிலை பல்கலைக் கழகமாக சாயி பக்தரும், யு.ஜி.சியின் தலைவருமான மாதுரி ஷாவால் சில வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

வறிய நாடுகளில் செய்யப்படும் தானதர்மம் பற்றிய செய்தி பகுத்தறிவு வாதத்தை புதைச் சேற்றில் அமுக்குகிறது. சோகம் என்னவெனில், இந்தியர்கள் இன்னமும் கூட இனவாதிகள்தான்; வெளிறிப்போன முகத்துடன், வெளிநாட்டவர் ஒருவர் வந்து பாபவை ஏற்றுக் கொண்டு விட்டால், பின் ஐயப்பட ஒன்றுமில்லை. தேசிய வானொலியும், தொலைக்காட்சியும் பாபாவுக்காக பிரச்சாரம் செய்கின்றன. பத்திரிகையாளர்கள் ஏமாளிகளாகவோ, விலைக்கு வாங்கப்பட்டவர்களாகவோ உள்ளனர். நீதிபதிகள் சில நேரம் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகள் சார்ந்து முடிவெடுக்கும் பலவினம் கொண்டவர்கள். பாபாவுக்கு அளிக்கப்படும் அரசியல் ஆதரவு நிலைமையை மேலும் சீரழிக்கிறது. (மூடநம்பிக்கை யாளரான நரசிம்மராவ், அவரது மந்திரி சபை மற்றும் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா ஆகியோர் தங்களது அலுவலகப் பொறுப்பில் இருந்தவாறே சாயிபாபாவை சந்திக்க ஆரம்பித்தவுடன் அவரது செல்வாக்கு பன்மடங்கு பெருகியது) இந்தியாவில் அரசியல் மற்றும் குற்ற அடையாளங்கள் இரண்டறக் கலந்து விடும்.

விஞ்ஞானிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள் இந்த நவீன ஆன்மீகப் போலி மீதான தங்களது மடத்தனமான பக்தி காரணமாய் சமூகத்தின் முன் எடுத்துக் காட்டுகளாய் விளங்கி பிறரை தவறாக வழி நடத்துகின்றனர். தானதர்மம் என்பது வெறுமனே பாபாவின் வழிபாட்டுக் குழுவிலும், சாம்ராஜ்ஜியத்திலும் முதலீடு செய்வதும், வரியைத் தவிர்க்கும் சூழ்ச்சியும் ஆகும் என்பதை நல்லெண்ணம் கொண்ட பலரும் சத்யசாயி பாபாவின் பக்தர்களிலும், அவரைப் பின்பற்றுபவர்களில் பலரும் - புரிந்து கொள்ளத் தவறுகின்றனர். அறிவுஜீவிகளாலும், தங்கள் ஆய்வறிக்கை அடகு வைத்து வேண்டுமென்றே ஏமாந்து போகும் பொது மக்களாலும் சத்யசாயி எனும் அக்டோபஸ், அற்புதங்களின் வசீகரத்தால், தன் உணர்கொம்புகளை தெலைவாகவும், விரிவாகவும் பரப்பி வருகிறது.

மேலும் படிக்க: Saiguru.com
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates