Sunday 6 February 2011

நாங்கள் காதுகளை திருப்பிய போது


என்னைப் பார்த்து தான்

தலையணையில் தலை சாய்க்க

படுக்கை ஓரமாய் உருள

சதா காதுகளை பல கோணங்களிலாய் தூக்கி திருப்பி ஒட்டு கேட்க


உணவையும் உறவையும் நுகர்ந்தவுடன் முதுகெலும்பை வால் போல் தூக்கிக் கொண்டு நடக்க

பார்க்காதவற்றுக்குக் கூட பயந்து கொள்ள

கற்றிருந்தது

இருப்பதிலே வினோதம்

எனக்கு முன்னரே

புரியாததற்கு பதிலாக மீயாவும்

புரிந்ததற்கு கேள்வியாக மௌனமும்

தெரிந்திருந்தது தான்

நாங்கள் இருவரும் மௌனித்திருக்கும் போது

உலகம் தன் அனைத்து துளைகள் வழியும்

ரத்தம் கசிந்தது

எதிரெதிர் துருவங்களில் அக்குருதியால்

உறைந்தது

இறந்த கடல்களில் ஒவ்வொரு அணுவாய்

உயிர்த்தது

அனைத்து திசைகளிலும் புயல்களை

உள்ளிழுத்து ஆசுவாசித்தது

வானின் கண்ணாடி பாளங்களில் விண்கற்களை

வாங்கிக் கொண்டது

தன் கருப்பையை திறந்து திறந்து மூடியது

நாங்கள் காதுகளை காதுகளை திருப்பிய போது

அது ஒருமித்து அலறியது
Share This

1 comment :

  1. வித்தியாசமா இருக்குது.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates