Saturday 12 February 2011

இடைப்பட்ட வெளியில்



நாய்க்கு கதவின் பொருள்
புரிவது இல்லை
அது கதவுக்கும் வெளிக்கும் நடுவாக
அமர்ந்து வாலசைக்கிறது
தன் காதை அறைக்கு உள்ளாக
அறை ஜன்னலின் திசைக்கு
திருப்புகிறது
தொலைவில் கேட்கும் குரைப்புகள் விசும்பல்கள் ஊளைகள் சத்தமான அழைப்புகள் ரயில் சைரன் குழந்தைகளின் கீச்சிடலுக்கு
திடுக்கிட்டு பதற்றமாகி
இடைப்பட்ட வெளியில் இருந்து வெளியே சென்று உறுதிசெய்து
மீண்டும் திரும்பி
மூடின கதவிடம் முறையிடுகிறது
பிறாண்டுகிறது
சிலமுறை அறைகிறது
ஒருமுறை நின்று தள்ளுகிறது
தட்டினால் திறப்பதில்லை கதவு
என்பது நாய்க்கு தெரிந்தது தான்
அறைக்குள் அதன் பிராந்தியமும் இல்லைதான்
மறுபுறம் ஓசைகளின் குழப்பத்துக்குள் திரும்புதலும்
அவஸ்தையே
அதனால்
அதன் காதுகள் திசைக்கொன்றாய் திரும்பி கேட்கின்றன
இடைவெளியின் இடத்தில்
கதவு ஏன் இருக்கிறது?
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates