Tuesday 19 July 2011

விடுப்பில் இருக்கும் நாய்



ஜுரத்தில் இருக்கும் நாய்
அப்பால்
பாலத்தில் செல்லும் ரயிலின்
அலறலுக்கு
மெல்ல
எழுந்து படுக்கிறது
ஓசை அடங்கியதும்
மூச்சு சீராகிறது
பக்கத்து பால்கனியில்
விளையாடும் குழந்தைகளை நோக்கி
இருமுறை குரைத்து விட்டு வருகிறது
தன் எஜமானனுக்காக
அது காத்திருக்கவில்லை

ஆனாலும்
அவரிடம் வாலாட்டி கொஞ்சி விட்டு
திரும்புகிறது

கடிகாரம் பார்க்க தெரியாவிட்டாலும்
அதனதன் நேரத்திற்கு முன்பே
அங்கு சென்று
ஜன்னலையும் கதவையும் உணவுத்தட்டையும் நீர்க்குவளையையும் படுக்கையையும் விளையாட்டு பொருட்களையும்
கவனிக்கிறது

புதிய வாசனைகள் வராத
காற்று அடைபட்டுப் போன
மனிதர்களின் எதிரொலிகள் மட்டும் கேட்கிற
திரும்பத் திரும்ப அதே வேளைகளில்
அழைப்பு மணிகள் அடிக்கிற
அடைபட்டுப் போன
வீட்டில்
ஒரு புதிய திறப்பை
மோப்பம் பிடித்து கண்டுபிடிக்க
சின்ன சிறகடிப்புகளை தேடி பாய்ந்து செல்ல
வெளியேறாத பொழுதுகளில்
தன் கழுத்துக் கயிறை தானே தூக்கி நடக்க
அது தவறுவதில்லை

கதவு ஏன் மூடப்படவில்லை
அல்லது
கதவை யார் மூடவில்லை
என்று அது
கேட்பதில்லை
வாசலில் சென்று படுத்த பின்
ஏன் இக்கதவு
இன்னும் மூடவில்லை
என்று அசட்டையாய் யோசிக்கிறது
அவ்வெண்ணத்தை ஸ்தாபிக்க
ரெண்டு குரை குரைக்கிறது

ஜுரத்தில் இருக்கும் நாய்
தான் விடுப்பில் இருக்கும் போது
வீடு
எப்படி இருக்கிறது
என்று அரைக்கண்ணை திறந்து
கவனிக்கிறது
Share This

3 comments :

  1. நாய்களின் நன்றி விசுவாசத்தை அழகிய கவிதையாகத்
    தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்....

    ReplyDelete
  2. நாயின் குணத்தை நயமாக சொன்ன விதம் அற்புதம் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. தன் எஜமான் மீதும் அந்த வீட்டின் மீதும் நாய்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை படம்பிடித்துள்ளீர்கள் வாழ்த்துகள்.மீதும் நாய்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை படம்பிடித்துள்ளீர்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates