Saturday 25 February 2012

ஒரு இரங்கற்பாவின் துணுக்குகள் - டேன் பாகிஸ்



உன் கண்களை மூடி விட்டேன்.
உன் கரங்களை திரும்ப வைத்து விட்டேன் அவற்றின் இடத்தில்.
உனது பாதங்கள் என்னை பரிதாபத்துடன் பார்க்கின்றன:
நான் அநாவசியம்.
என் கைகளை பார்க்கிறேன்.
என் கைகளை வைத்து என்ன பண்ணப் போகிறேன்?
என் கட்டின ஷூவார்களை கட்டுகிறேன்.
பொத்தானிட்ட அங்கிக்கு பொத்தானிடுகிறேன்.

புது கல்லறைத்தோட்டம் நல்ல இடவசதி உள்ளது,
முழுக்க எதிர்கால தொழில்நுட்பம் பொருந்தியது. தொலைவில், பக்கமாய், விடாமல் தொடர்ந்து
தேவாலய சேர்ந்திசை இயக்குநர்கள் பாடுகிறார்கள்.

நீ அமைதியாக, சற்று சங்கோஜப்பட்டது போல் இருக்கிறாய்:
ஒருவேளை பிரிவு நீண்டதாக இருக்கும்.
நகங்கள் வளர்கின்றன, மெல்ல, ஒரு அமைதி ஒப்பந்தம் தீட்டுகின்றன.
வாய் துவாரம் அதை படைத்தவனுடன் அமைதி கொண்டு விட்டது.

ஆனால் இப்போது பூமியின் முஷ்டிகள்
பொறியின் பலகைகளில் முட்டுகின்றன:
எங்களை உள்ளே அனுமதி,
எங்களை உள்ளே அனுமதி.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates