Friday 3 September 2010

மனைவிக்கு ஒரு பிறந்தநாள் கவிதை

மிகச்சிறந்த தருணங்களும்
ஆகப்பெரும் துயரங்களும்
கடந்து செல்ல அனுமதித்தோம்

மறக்க முடியாத
மறக்க விரும்பாத
துக்கங்களை
நாட்காட்டியின் துடிக்கும் தாள்களில்
குறித்து வைக்கவில்லை

ஒரு புயலின் மையம் போல்
ஆற்றின் தூண்டிலிட்ட கரை போல்
எதனாலும்
அலைகழிய இல்லை
அடித்துச் செல்லப்பட இல்லை

நம் காதல்
நேற்றில் தொடங்கி
நேற்றிலேயே இருக்கிறது

நமது இன்று
ஒரு தூங்கும் குழந்தையின் கையைப் போல்
திறந்தே இருக்கிறது
Share This

5 comments :

  1. ஒரு தூங்கும் கையைப்போல் திறந்தே இருக்கிறது

    அருமையான சிந்தனை ....

    பாராட்டுக்கள்
    வளவன்

    ReplyDelete
  2. ஒரு தூங்கும் குழந்தையின் கையைப் போல்திறந்தே இருக்கிறது......நல்ல சிந்தனை....... வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates