Thursday 14 October 2010

காற்றுக்குள் மூழ்கிய இலைகள்




ஈரச்சாலையை தொடும் மரக்கிளை
விடியாப் பொழுது
புல்திண்டில் தலைசாய்க்கும் நாய்

விரைத்து நின்ற கல்நாகங்கள் மூன்று
மண்ணில் உதறின பூமாலை
வெகுகீழே மூடுபனிக்குள் தலைகள்

பூமிக்குள் ஊறிய பூமி
காற்றுக்குள் மூழ்கும் இலைகள்
பூச்செண்டுகள் விற்கும் சிறுவனின் கவனம்
சிறுகும் மலைகள்
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates