Tuesday 13 November 2012

கலவர விருந்தின் சுவை


நான் தினத்தந்தியில் வேலை பார்த்த சமயம் சிவந்தி ஆதித்தனின் பிறந்த நாளுக்கு விழா எடுத்து பிரியாணி போட்டார்கள். மட்டன் பிரியாணி. 

ஊரில் இருந்து கூட்டங்கூட்டமாக சாதிசனம் மற்றும் ஊழியர்கள் வந்து சண்டை போட்டபடி நான்கு ஐந்து பிளேட்டுகள் முழுங்கினார்கள். இதென்ன ஸ்பாஞ்சு மாதிரி என்று ரசமலாயை தூக்கி போட்டு விட்டு குடித்தார்கள். இந்த ரகளை மத்தியில் நானும் நண்பர்களும் ஆளுக்கு ரெண்டு பிளேட் சாப்பிட்டோம். 

வாழ்க்கையில் பிறகு எவ்வளவோ ஓட்டல்களில் சாப்பிட்டு விட்டேன். ஆனால் அப்படி ஒரு பிரியாணி உண்டதே இல்லை. கை வைத்தால் ஒரு சுவையூறும் கறித்துண்டு வரும். மீண்டும் கை வைத்தாலும் சோறு வராது. கூட அந்த பழங்குடி அட்டகாச சூழலும். உண்மையான விருந்தென்றால் அந்த ஆவேசமும் வண்ணங்களும் வேணும். அடித்து பிடித்து சண்டை போட்டு மனிதர்கள் வாரித்தின்பது பார்ப்பதே ஜாலி தான்.

நேற்று நான் முதன்முறை மட்டன் பிரியாணி பண்ணிப் பார்த்தேன். நன்றாக வந்திருந்தது - சைவமான என் மனைவியே சுவைத்து உண்டாள். எனக்கு மட்டும் ஏதோ வெஜிடேரியன் சாப்பிடுவது போல இருந்தது.
Share This

2 comments :

  1. நல்லது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates