Monday 19 November 2012

ஏன் எழுத்தாளர்களைப் பார்த்தால் பயப்படுகிறேன்?



எனக்கு எழுத்தாளர்களை பார்த்தாலே குலை நடுங்கும். ஏன் என விளக்கி விடுகிறேன்.



1. அவர்கள் நம்மிடம் பேச ஆரம்பித்தால் கழுத்தில் ரத்தம் வரும் வரை விடமாட்டார்கள்.


2. எழுத்தாளனாக போஸ் கொடுத்தபடி பஞ்ச் வசனம் பேசுவார்கள்.


3. வேறு யாரிடமோ சொல்ல வேண்டியதைக் கூட நம்மிடம் சொல்லுவார்கள்.


4. தம் கவிதை, கதைகளின் பொருள் என்ன என விடாமல் வியாக்கியானிப்பார்கள் அல்லது தன் ஆளுமையை பிரஸ்தாபிப்பார்கள்.




5. இதனிடையே மறந்து கூட காப்பி தண்ணி தரமாட்டார்கள்.


6. நீங்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே ஒரு சந்தேகப் பார்வை பார்த்து “வாங்க” என்பார்கள். போகும் போது அதே பார்வையில் “வாங்க” என்பார்கள்.


7. எதிர்க்கலாச்சார்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் போனால் “நான் ஒரு வாரமாக் மூணு வேளையும் குடிக்கிறேன்” என்று சொல்லி மந்தஹசிப்பார்கள். பிறகு நான் ஒரு பொறுக்கி, உதவாக்கரை, ஒன்றும் சாதிக்காதவன், ஆனாலும் மகத்தானவன் என சொல்லி விட்டு உங்கள் கண்களை உற்றுப் பார்ப்பார்கள்.


8. நீங்கள் இடையே புகுந்து ஏதாவது சொல்லி விட்டால், “நானும் அதாங்க சொல்றேன்” என்று தான் சொல்லி வந்ததையே தொடர்வார்.


8. சுருக்கமாக மேடை நாடகத்தில் ஒரே ஒரு பார்வையாளனாக இருக்கும் நிலை ஏற்படும்.




நான் சந்தித்ததில் தேவதேவனும் மனுஷ்யபுத்திரனும் விதிவிலக்கு. தேவதேவனுடன் ஒரு கேம்பில் ஒரே அறையில் இரண்டு நாள் இருந்தேன். அவர் ஒரு சொல் கூட சொல்லவில்லை. மனுஷ் இலக்கியம் பேச மாட்டார், ரொம்ப நோண்டினால் ஒழிய. சு.ராவையும் குறிப்பிட வேண்டும். அவருக்கு நீங்க மிக அணுக்கமானால் ஒழிய இலக்கிய சங்கதிகளை வெளியே எடுக்க மாட்டார். உங்கள் பின்னணி, தொழில் வேலை படிப்பு விபரங்களை விசாரித்து அது குறித்து ரொம்ப சாதாரணமாக உரையாடிக் கொண்டிருப்பார். 8 மணிக்கு சன் செய்திகள் ஆரம்பித்ததும் உங்களிடம் தெரிவித்து விட்டு அதை போட்டு பார்ப்பார். சரியாக உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்ததும் “எனக்கு வேற வேலை” இருக்கு என விடைபெறுவார். முக்கியமாக அவர் உங்களை ஒரு ரத்தம், சதை எலும்பு உள்ள ஒரு வழக்கமான மனிதராக பாவிப்பார். தன்னையும் அப்படியே.


எல்லாவற்றையும் விட முக்கியம் சு.ராவிடம் பேசும் போது உங்களுக்கு ஒரு எழுத்தாளனிடம் உரையாடும் உணர்வே ஏற்படாது. அது எவ்வளவு பெரிய காரியம் இல்லையா?
Share This

2 comments :

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates