Tuesday 19 November 2013

ஒரு மலைப்பிரசங்கத்துக்கான குறிப்புகள் -- நின் ஆண்டிரூவ்ஸ்


  1. அல்குல்கள் கடவுள்கள் அல்ல. அவை படைக்கப்பட்டவை.
  2.   கடவுளைப் போலல்லாது அவை நித்தியமானவை அல்ல.
  3.  கண்ணியமாய், கம்பீரமாய், புத்திசாலித்தனமாய் உள்ள அவற்றை நாம் எப்படியும் கவனத்தில் கொள்ளத் தான் வேண்டும்.
  4.    எல்லா ஆன்மீக தோற்றங்களையும் போல அல்குல்களும் ஒரு நாளில் எப்போது வேண்டுமெனிலும் மனிதக் கண்ணால் காணக் கூடியவை அல்ல. 
  5.   அல்குல்கள் கண்ணுக்கு புலப்படுபவை, புலப்படாதவை, புனிதமானவை, பங்கமானவை என இரண்டையும் பிரநுத்துவப்படுத்துகின்றன.
  6.   அவை ஒரே நேரத்தில் எங்கும் தோன்றுவதில்லை, எங்கும் தோன்றுகின்றன. அந்தரங்கமானவையாகவும் பொதுவானவையாகவும், மனிதனாகவும் இறையாகவும் உள்ளன.
  7.  ஆதாம் மற்று ஏவாளின் மாந்திரிகக் கதையில் ஆண்டவர் தெய்வீக அல்குலின் நுழைவாயிலில் வாளேந்திய தேவன் ஒருவனை நிறுத்தி திரும்பி வருகிற பத்தாம்பசலிகளை தடுக்கும்படி செய்தார்.
  8.  தரிசனங்கள் அவற்றை “ஒரு மேகத்தால் மூடப்பட்டு தலைக்கு மேல் வானவில்லுடன் உள்ளதாய்” விவரிக்கின்றன.
  9.  பல சமயங்களில் ஒரு அல்குல் ஒரு நிஜப்பெண்ணின் உருவை எடுப்பதுண்டு; அப்போது அதற்கு சிலவேளை மனித ஆன்மா உள்ளதாகவும் தவறாக நினைக்கப்பட்டுள்ளது.
  10. ஒருவர் அந்நியர்களை வரவேற்க மறக்கக் கூடாது, ஏனெனில் ஒரு அல்குலை அவர் அறியாமலே உபசரிக்க நேரிடலாம்.
  11. எப்போது நினைவில் கொள்ளுங்கள்: ஒருவர் ஒருக்காலும் அல்குல்களை வணங்குதல் கூடாது. அல்லது பிற பொன்னிற பசுக்கன்றுகளையும்.
  12. அல்லது ஒருவர் தனது ஆன்மாவை வழிநடத்தும் வண்ணம் ஒரு அல்குலை பூமிக்கு அனுப்பும் படி வேண்டுதலோ கூடாது.
  13. ஒரு அல்குல் தன்னிச்சைப்படி வரவேண்டும். ஏனெனில் ஒரு அல்குலின் மார்க்கம் அதுவே, ஆதி அந்தத்தினுடையதும் அதுவே.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates