Saturday 20 March 2010

இயக்குனர் ராமின் முத்துக்குமார் இறுதி ஊர்வல பதிவு


இயக்குனர் ராம் தமிழுணர்வாளர். திறமையான எழுத்தாளரும் கூட. ஈழத்துக்காக உயிர் துறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அது தொடர்பான அரசியலில் பங்காற்றிய ராம் இச்சம்பங்கள் குறித்து இனியொரு தளத்தில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். பழ. நெடுமாறன், வை.கோ, திருமாவளவன் போன்றோர் நடிப்பது இயக்குனருக்கு எளிதில் புலனாகிறது. இந்த எழுச்சியான கட்டத்தில் இனவுணர்வுடன் கலந்து கொள்ளும் திரைத் துறையினர் முன் அரசியல்வாதிகள் அரங்கேற்றும் சினிமாவின் திரைக்கதையின் சூழ்ச்சியும் பொய்மையும் கொண்டு எதிர்பாரா திருப்பங்களுடன் எழுதப்பட்டது.



திருமாவும் அவர் கட்சியினரும் மாணவர்களை தாக்குவது, வலுக்கட்டாயமாக பிணத்தை கைப்பற்றி, ஏற்கனவே திட்டமிட்டிருந்த சுடுகாட்டுப் பாதையை மாற்றி தங்கள் ஆதரவாளர்களின் பாதையில் கொண்டு செல்வது, பின்னர் மாணவர்களை அராஜகவாதிகள் என்பது, ஆளுங்கட்சிக்காரர்கள் மாணவ்ர்களை திசை திருப்ப விடுப்பு அறிவிப்பது போன்றவை ஒன்று சொல்கின்றன. போராட்ட அரசியல் நமது கலகவாத தலைவர்களுக்கு ஆரம்ப முதலீடு மட்டுமே. இன்று பங்குசந்தை நிபுணர்கள் போல் அரசியல் செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள். ராம் மற்றொரு முக்கிய அரசியல் பாத்திரம் குறித்து அவதானிக்கிறார்: பழ. நெடுமாறன் முத்துக்குமரன் பிணத்தை உடனடி எடுப்பதற்கு ஒரு காரணம் சொல்கிறார். சனிக்கிழமை வரை தாமதிக்கக் கூடாது. ஏனென்றால் சனிப்பிணம் தனியே போகாதாம். என்ன பிற்போக்கான மனிதர். இவர் எந்த தலைமுறையின் எச்சம்.

ராம் இக்கட்டுரையை நிதானமாக, நேரடியாக எழுதியுள்ளார். உண்டு துய்ப்பதை தவிர வேறெதற்கும் வாய் திறக்காத ஒரு சமூகத்தின் அவலத்தையும், தலைவர்களின் பாசாங்கை உணர்ச்சிவசப்படாமல் நுட்பமாக எழுதுகிறார். இதுவே நம்மை சுருக்கென்று குத்துகிறது. இந்த வலி நமக்கு அவசியம்.
Share This

1 comment :

  1. பிணந்தின்னும்
    அரசியல்வாதிகள்?

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates