Thursday 17 December 2009

ஜார்ஜ் சிர்ட்டெஷ் கவிதைகள்: 3

இறந்த குழந்தைகள் (கேனெட்டிக்கு பிறகு)



அவர்களுக்கிடையே ஏறத்தாழ சுத்தமாக ஒன்றுமே இல்லை. மனிதக்குரங்கு
தன் மரித்த குட்டியை பேணுகிறது ஏதோ உயிருடன் உள்ளது போல்,
அதன் அசைவற்ற மென்மயிர் உருவை மிருதுவாக கவனமாய் ஏந்துகிறது;
கீழே விட மறுக்கிறது. உடனடிக் கடமை அதுவே; கட்டாயம் ஆற்ற வேண்டும். அது கண்கள், வாய், மூக்கு
மற்றும் காதுகளை பரிசோதிக்கிறது, குட்டிக்கு
முலை கொடுக்க முயல்கிறது. அதை பராமரிக்கிறது. கிள்ளி அகற்றி சுத்திகரிக்க பார்க்கிறது. ஒரு வாரம் போல் கழிய
முலையூட்டுவதை நிறுத்தும் ஆனால் அதன் உடலில் வந்தமரும் பூச்சிகளை வீசி அடிக்கும் மேலும் அதன் சுகாதாரம் மீது ஆழமான ஆர்வம் காட்டும். முடிவில்
அதை கீழே வைக்க ஆரம்பிக்கும், அதை விட்டு விட கற்கும்.

அது சுருங்கி காய ஆரம்பிக்கும் மேலும் பயங்கரமாக நாறத் துவங்கும்.
உறுப்புகள் ஒவ்வொன்றாய் உதிர்வது வரை
அவ்வப்போது அது தோலில் கடிக்கும். சிறிதுசிறிதாக

அது அழுகும். தோல் கூட சுருங்க ஆரம்பிக்கும்.
கடைசியில் தன் மனதின் பின்னணியில் அது புரிந்து கொள்ளும்.
அது மென்மயிர் பொருட்களுடன் விளையாடும். ஒரு நுட்பமான

சுதாரிப்பு உள்ளது. மரித்தவரின் பாத்திரங்களை திருப்பு.
கடந்த காலத்துக்கு திரும்பு. மறத்தல் நல்லது.
உன் சின்னங்சிறு கட்டிலில் திரும்பத் திரும்ப புரளு
உன் மனதின் பின்பகுதி புரிந்து கொள்ளும் வரையில்.

வெளியே



நீ நிறையவே மறக்கிறாய். நினைவு உதிர்ந்து போகும்,
அதன் பிசாசு உறுப்பு தொடர்ந்து ஆட. பலகையை சுத்தமாய் அழி ஒவ்வொரு முறையும், நேற்று என்பதே இல்லாதது போல் அழுத்தித் தேய்.

தனது உள்ளார்ந்த தொந்தரவு செய்யும் வாசனைகளுடன்
உன் அம்மா நகர்ந்து செல்கிறாள். நீ தரைக்கு குறுக்கே ஓடி,
உன் பளு பற்றி தெரிந்திருக்க, அவளது அவளது மடியில் ஒளிகிறாய்.

வெளியே கொலைத் தண்டனைகள், பொது-அரங்கு விசாரணைகள். அரசுக் குழுமத்தின் நடவடிக்கைகளுக்கு கதவு திறந்து கொள்ளும்.
உன்னால் கொடுக்க முடிந்ததை விட

அதிகம் வேண்டும் கூட்டங்கள் தெருக்களில் உள்ளன.
அங்கு ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. அங்கு ஒரு குச்சி
மற்றும் கெரட் உள்ளன. டிராக் சூட் அணிந்த ஒரு சிறுவன் தன் கழுத்துப் பட்டை வெட்டுக்குள் அழுது சளி வடிக்கிறான் மேலும் சற்று சீக்காய் உணர்கிறான்,

அதே நேரத்தில், இதனிடையே, காலம் மறந்து விட்ட நிலம்
பிரம்மாண்ட பூக்களாய் மலர்கிறது,
ஒரு வெக்கையான கோடை பிற்பகலில் பேருந்தில்

நீ கடந்து செல்லும் பெரும் வயல்கள், கனிந்த பொழுதுகள்
போப்பிப் பூக்கள், சோளம் மற்றும் கருநீல செர்ரிகளாக சிவப்பேறும் வாசம், லண்டன் புற நகர் ஒன்றில் ஒரு டஜன்

எந்திரப்புல்வெட்டிகளின் ஓசை, கடந்து போன மேய்ச்சல்வெளிகள்,
சுத்தமாக துடைத்து, திருப்பி எழுதப்பட்டு, எண்களோ பெயரோ அற்ற வயல்கள், உனக்கு ஒருக்காலும் தெரிந்திராத ஒரு அந்நிய இடம் போல,

உன்னால் சரிவர நினைவுற முடியாத அந்த சதை வாசனை.

Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates