Tuesday 1 December 2009

கருத்துக் கணிப்பு

நண்பர்களே

இது ஒரு சிறு கருத்துக் கணிப்பு.

எதைக் குறித்து?

அதிகபட்சமாய் நாலு மணி நேரம் ஒப்பித்து விட்டு நம் கல்லூரி ஆசிரியர்கள் பலர் இன்று ஐம்பதாயிரத்துக்கு மேல் ஈட்டுகிறார்கள். நம் சமூகத்தில் கல்லூரி ஆசிரியர்கள் அளவுக்கு குறைந்த உழைப்பும் மிகுந்த சொகுசுமாக வாழும் மற்றொரு தொழில் வர்க்கம் இல்லை என்று நினைக்கிறேன். இது உண்மை என்று நம்புகிறீர்களா?

நம்பும் பட்சத்தில் நம் வரிப்பணம் அல்லவா வீணாகிறது. கல்லூரி ஆசிரியர்களின் வேலைப்பளுவை அதிகரித்து அதன் மூலம் அதிக சமூக பங்களிப்பு செய்ய வைக்கலாமா?

உங்கள் கருத்தை ஆம் அல்லது இல்லை என்று சுருக்கமாகவோ விரிவாகவோ எழுதலாம்.

இந்த கருத்துக் கணிப்பின் நோக்கம் என்ன?
கல்லூரி ஆசிரியர்களின் வேலைப்பளுவை அதிகரிப்பது பற்றி ஒரு கட்டுரை எழுத உள்ளேன். உங்கள் கருத்துக்கள் ஒரு தூண்டுதலாகவும், வலு சேர்ப்பதாகவும் அமையும். உங்கள் அனுமதியுடன் அவற்றை என் கட்டுரையில் குறிப்பிடவும் திட்டமிட்டுள்ளேன்.

இந்த கருத்துக் கணிப்பின் பயன் என்ன?

ஒரு சமூக அநீதிக்கு எதிரான அறிவார்ந்த சமூகத்தின் குரலாக அமையும். ஒரு மாற்றத்துக்கான துவக்கமாக, மௌனித்த குளத்தில் சிறு கல்லாக உங்கள் கருத்து அமையும்.

நன்றி!

abilashchandran70@gmail.com
Share This

2 comments :

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates