Saturday 27 November 2010

தேர்வு குளறுபடிக்கு யார் பலிகடா?


 கிரிக்கெட்டில் ஒரு வீரரை தேர்வு செய்ய அடிப்படை என்ன?
திறமை. இத்திறமையை உள்ளுணர்வு சார்ந்து தேர்வாளர் கண்டறியலாம். அல்லது ஆட்ட ரிக்கார்டை வைத்து முடிவு செய்யலாம். மற்றொன்று ஆட்டவகைமைக்கான பொருத்தம்.
T20க்கு பொருத்தமானவர் பலசமயம் ஒருநாள் அட்டத்துக்கு கூட தோதாக இருப்பதில்லை. மனநிலை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய காரணங்களுக்கு ஓஜ்ஹா, யூசுப் பதான் என உதாரணங்கள் சொல்லலாம். திறமைக்கு இன்றைய ஆட்டத்தில் (இந்தியா-நியுசிலாந்து ஒருநாள் ஆட்டம்) ஆடின சாஹாவை சொல்லலாம். சாஹாவின் மட்டையாட்டம் சற்று மட்டம் என்பது நமக்குத் தெரியும். மன உறுதி கொண்ட ஒரு சராசரி மட்டையாளர் அவர். அவரது கீப்பிங்கும் ஒன்றும் அபாரம் அல்ல. அவர் விசயத்தில் தேர்வாளர்கள் சிறு தவறு செய்கிறார்கள். சீனியர்கள் நடுக்கமான ஒரு மட்டையாட்ட வரிசையில் அவரை தேர்ந்ததால் அணியின் சமநிலை சற்று குலைந்து விட்டது. ஐந்து விக்கெட் இழந்தால் இந்தியாவின் மென்மையான அடிவயிறு எளிதாக இனி வெளிப்பட்டு விடும். கடைசி பத்து ஓவர்களில் பந்து வீச்சாளரில் ஒருவர் இனி பொறுப்பெடுத்து ஆட வேண்டி இருக்கும். சாஹாவால் மட்டையாட முடியாதா?
முடியும். ஒரு தீயணைப்பு வீரராக. 35-40 ஓவர்களுக்கு 5க்க்கு மேற்பட்ட விக்கேட்டுகள் இழந்து தடுமாறும் நிலையில் சாஹாவால் பொறுமையாக போராடி இன்னிங்சை இறுக்கி கட்டி முடிச்சிட முடியும். சுருக்கமாக, சாஹா நிச்சயம் ஒரு வளமையான முதலீடு அல்ல. சாஹா எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்? அவரது கீப்பிங் திறமைக்காக என்கிறார் அணித்தலைவர் காம்பிர். ஆனால் ஒருநாள் ஆட்டத்துக்கு கீப்பிங்கை விட அதிரடி மட்டையாட்டமே அதி முக்கியம். ஒரு நல்ல கீப்பரை விட அதிக வசூல் ஆகக் கூடியவர் ஒரு பாதுக்காப்பான கீப்பரும் ஆனால் மிக நல்ல மட்டையாளறுமான ஒரு ஆல்ரவுண்டரே. தேர்வாளர்கள் தினேஷ் கார்த்திக், பார்த்திவ் படேல் அல்லது கர்நாடகாவின் கவுதம் போன்றோரில் முத்லீடு செய்ய வேண்டும். பார்த்திவுக்கு போதுமான ஒருநாள் வாய்ப்புகள் தரப்படவில்லை. அவரை விட நல்ல கீப்பரான தினேஷ் துவக்க வரிசையில் வீணடிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் (276 மட்டுமே அடித்துள்ள நிலையில்) இந்தியா தோல்வியுறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வெற்றி தோல்வி குறித்து அதிகம் அலட்டிக் கொள்ள ஒன்றும் இல்லை. இன்று தோற்று விட்டால் அடுத்த ஆட்டத்திற்கு யார் அணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்று யோசிக்கலாம்.
நிஜத்தில் இன்றைய முக்கிய மட்டையாட்ட திணறலுக்கு காரணம் சமநிலையின்மை. அதற்கு காரணம் சாஹாவின் தேர்வு. ஆனால் சமநிலையை மீட்க சாஹாவை விலக்க முடியாது. அணியில் அவர் மட்டுமே கீப்பர். இன்றைய ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகள் எடுத்தால் கூட தோற்கிற நிலையில் அஷ்வின் விலக்கப்படுவார். அல்லது ஐந்து விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். அஷ்வினின் இடத்தில் சவுரப் திவாரி அல்லது சுழலர் ஜடேஜா அடுத்த ஆட்டத்தில் கொண்டு வரப்படுவார். இன்றைய ஆட்டத்தில் நமது பந்து வீச்சு நன்றாக உள்ள பட்சத்தில் (பதான் நன்றாக வீசும் பட்சத்தில்) மட்டையாளர் உள்ளே வர வாய்ப்பு அதிகம் இருக்கும். நியுசீலாந்து சுழலை நன்றாக ஆடி இலக்கை எளிதாக அடைந்தால் ஜடேஜா வருவார். இதனை நான் சொல்லக் காரணம் தேர்வாளர்கள் செய்யும் ஒரு அடிப்படை தவறால் நடக்கும் அநியாயத்தை சுட்டத் தான். ரஞ்சி தொடர்களில் இரண்டு பருவங்களிலுமாக நன்றாக ஆடி, இப்போது ஹர்பஜனும் இல்லாத பட்சத்தில், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இத்தொடரில் தொடர்ச்சியாக ஒரு ஐந்து ஆட்டங்கள் ஏனும் ஆட வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். தேர்வாளர்கள் மட்டையாட்ட தன்னம்பிக்கை உள்ள ஒரு நபரை கொண்டு வந்திருந்தால் இது எளிதாகி இருக்கும். அறுவை சிகிச்சையின் போது கத்தியையும் சேர்த்து உள்ளே வைத்து தைத்து விடுவது போன்ற நிலைமை இது. அவசரமாக ஒரு பலிகடா தேவை!
Share This

3 comments :

  1. நல்ல அறிவு மதி பதிவு

    ReplyDelete
  2. அறுவை சிகிச்சையின் போது கத்தியையும் சேர்த்து உள்ளே வைத்து தைத்து விடுவது போன்ற நிலைமை இது.

    இப்படித்தானே ஒவ்வொரு
    முறையும் நடக்கிறது.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates