Monday 31 January 2011

பயணக் குற்றச்சாட்டுகள்




பயணங்கள்
இல்லாத பாதைகளை
இருப்பதாய் காட்டுகின்றன

கொண்டு சேர்க்கும்
புதிய இடம்
ப்ழைய இடம் என்பதை
மறைக்கின்றன

பயணங்கள்
நம் சதுரங்க பலகையில்
இன்னும் ஏராளமாய்
காய்களை கொண்டு நிறைக்கின்றன
யாருக்காக யார் ஆடுவது
என்ற குழப்பம்

பயணங்களின் போது சந்திக்கும்
மனிதர்கள்
கடந்த காலத்தில் இருந்து
கால் அயர நடந்து வந்துள்ளனர்
அவர்களுடன் கைகுலுக்கும் போது
காலத்தின் தராசு தடுமாறுகிறது

பயணம் முடிந்து திரும்பும் போது
உலகம்
அதிக அன்பாலும்
அதிக குரூரத்தாலும்
நிரம்பி உள்ளது

நாம் கண்டறிகிறோம்
ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம்
அர்த்தம் இல்லாமைக்கும் ஒரு காரணம்

திரும்பி வந்த பிறகு
உலகிடம்
போதிக்க ஏராளம் உள்ளது

ஒன்றுமே கண்டடையாத போதிலும்
பயணங்களின் முடிவில்
ஒரு சொல் உள்ளது
அதை
மகாசமுத்திரத்தில் ஒழுக விடலாம்

ஆனால்
வஞ்சனை நடந்துள்ளது
அதன் பின்னால் ஒரு சூழ்ச்சி உள்ளது

திரும்பி வந்த பிறகு
வீட்டில் விட்டுச் சென்ற
பொருட்கள்
துடைத்து சுத்தமாய் வைக்கப்பட்டுள்ளன

காற்றோட்டத்தின் சுகந்தம் நிலவுகிறது

கலைக்கப்பட்ட பொருட்கள்
குலைவின் அமைதி மாறாமல்

வீடு
திசை மாறிப் படுத்த
ஒரு மிருகம் போல் உள்ளது

வராந்தா நாற்காலியின் மேலே
பறவைகள் இன்னும் கீச்சிடுகின்றன
மரங்கள் அமைதி காக்கின்றன
Share This

7 comments :

  1. Arumai...

    Varigal sinthikka vaikkindrana...

    ReplyDelete
  2. அவர்களுடன் கைகுலுக்கும் போது
    காலத்தின் தராசு தடுமாறுகிறது

    பயணம் முடிந்து திரும்பும் போது
    உலகம்
    அதிக அன்பாலும்
    அதிக குரூரத்தாலும்
    நிரம்பி உள்ளது



    ......அருமையாக சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  3. இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது. இதற்கு மேல் எதுவும் சொல்லத் தேவைப்படவில்லை. ஞாநி

    ReplyDelete
  4. நன்றி டக்கால்டி மற்றும் சித்ரா

    ReplyDelete
  5. நன்றி திரு ஞாநி அவர்களே

    ReplyDelete
  6. ஒன்று நீங்கள் மனுஷ்யபுத்திரனின் கோஸ்ட் ரைட்டர். இல்லையெனில் உங்களுக்கு மனுஷ் கோஸ்ட் ரைட்டர். மனுஷ்
    எழுதுவதே சகிக்க முடியாமல் ஸ்டீரியோ டைப்பில் இருக்கிறது, நீர் உம்ம கவிதையை எழுதாமல் ஏனய்யா அவருடைய கவிதையைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கிறீரு? இந்த விமர்சனத்தை நக்கல் என்று எடுத்துக்கொள்ளாமல் கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் உமக்கும் உம்முடைய கவிதைக்கும் நல்லது. இல்லையெனில் காலம் முழுவதும் மனுஷின் காலடியில் இருந்துகொண்டு காலாவதி ஆகிப்போன அவருடைய கவிதை நடையை நீங்களும் கையில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கலாம்.

    செல்வகுமார்

    ReplyDelete
  7. செல்வகுமார், மனுஷின் ஒரு வாசகனாக இந்த கருத்து, ஒப்பீடு, எனக்கு மகிழ்ச்சி தான் அளிக்கிறது. உங்கள் ஊகத்துக்கு நன்றி. miles to go ... mate

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates