Monday 24 January 2011

விளிம்பில்




பூனைக்கான ஆழம்
கீழிருந்து பார்த்தால்
தெரிவதில்லை
பூனைக்கான உயரம்
மேலிருந்து பார்த்தால்
தெரிவதில்லை
விளிம்பில் அமர்ந்திருக்கும் பூனை
கீழே தாவுவதோ
மேலே எம்புவதோ
இல்லை
பூனையின் விளிம்பு
எங்கிருந்து பார்த்தாலும்
தெரிவதில்லை
பூனை நன்கு தெரிந்த
ஒரு சொல்லின் மீது அமர்ந்திருக்கிறது
நன்கு தெரிந்ததனாலே
யாரும் யாரிடமும் சொல்வதில்லை
அது அமர்ந்திருக்கவில்லை
விளிம்பின்
ஆழ உயரங்களை
அதன் இரு பக்கங்களை
தீர்மானிக்கிறது
அது வானத்தில் பறப்பதாய் தெரியும்
ஒரு கோணம் கூட உண்டு
பூனை அமர்ந்திருப்பது இல்லை
அதை யாரும் பார்ப்பது இல்லை
Share This

4 comments :

  1. வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட கவிதை.

    ReplyDelete
  2. பூனை இல்லை ஆனால் உண்டு ..
    intriguing ,very intriguing

    ReplyDelete
  3. நன்றி சித்ரா மற்றும் பத்மா

    ReplyDelete
  4. நல்லா புரிஞ்சிடுச்சுங்க... :)

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates