Thursday 27 January 2011

மீதமுள்ள வரிகளை சமாளிப்பது அல்லது அழிப்பது



மீதமுள்ள வரிகள்
ஒரு கண்ணாடி புட்டியின்
குடிக்கப்பட்ட
நீரின் பகுதியை போன்றவை

அவற்றை வெளியேற்ற முடியாது
அதற்கு
நீங்கள் அத்தனை வார்த்தைகளையும்
அழித்தாக வேண்டும்

ஆனால்
வேறு வழிகள் உள்ளன

என்றாவது பயன்படுத்தப் போவதாய்
உறுதி எடுத்துக் கொள்ளலாம்

மிச்சமான வரிகளைக் கொண்டு
ஒரு கவிதை எழுதலாம்
ஒரு உறவை ஆரம்பிக்கலாம்
புரியாத பரீட்சார்த்த கதையொன்றில்
எங்காவது இணைக்கலாம்
இது போன்ற வெவ்வேறு மிச்சமான் வரிகளை
இணைத்து
ஒரு கவிதை நூலுக்கான
விமர்சனக் கட்டுரை செய்யலாம்

மிச்சமான வரிகளுக்கு
புதிய அர்த்த தளங்களை
கண்டடையலாம்.

அவ்வரிகள்
தனித்தே
புகழ் தேடித் தந்து
நம் இடத்தை வரலாற்றில் நிறுவிடும்
என்று பெருமை கொள்ளலாம்

அவற்றைக் கொண்டு
ஒரு நாவலை துவக்கி
வாழ்நாளெல்லாம் எழுதலாம்

எங்குமே பொருள்பட சேர்க்க முடியாத
மிச்சமான
வரிகளைக்
கொண்டு நீங்கள் எவ்வளவோ செய்யலாம்

அழிப்பதை தவிர

அதற்கு,
நீங்கள்
பொருத்தமான
ஒரு பெயரை தந்து
தோலின் நிறம் தந்து
ஆடை அணிவித்து
நாற்காலியில் அமர்வித்து
ஒரு வரலாற்றை தந்து
வரலாற்றுக்கான விளக்கங்களும் தீர்ப்புகளும்
ஒட்டின ஊடக விவாதங்களும் தந்து

ஒவ்வொன்றாய் தர வேண்டும்.
Share This

8 comments :

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates