Saturday 22 January 2011

அம்மா போன பிறகு



அம்மா போன பிறகு
ஒரு மரக்கன்றை நட்டு
நீரூற்றலாம்
பூக்களை மென்மையாய் கொய்து
கண்ணாடி ஜாடியில் அடுக்கி பார்க்கலாம்
பெரும் மலைத் தொடர் ஒன்றில்
எறும்பு போல் ஏறிப் பார்க்கலாம்
மழைத் தாரைகளின் தொடர்ச்சியை
உன்னிப்பாய் பார்க்கலாம்
ஆழமற்ற உறவுகளுடன்
மணிக்கணக்காய் உரையாடலாம்
உடனே முடியாத
எதையும் செய்யலாம்
அம்மாவை பற்றி அசட்டையாக இருக்கலாம்
நீரில் துளி ரத்தம் போல்
வெறுப்பை கக்கலாம்
அம்மாவுக்காக காத்திருப்பது
எத்தனை பாசாங்கானது
என்று நினைத்துக் கொள்ளலாம்
Share This

9 comments :

  1. 'அம்மா போனபிறகு
    இப்படி -ஒரு
    கவிதையும்
    எழுதலாம்'

    கவிதை அருமை
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அத்தனையும் உண்மை.. மேலும் பலவும் உள்ளன அனுபவத்தில,

    ReplyDelete
  3. வித்தியாசமான கருத்துடன் உள்ள கவிதை. அருமை.

    ReplyDelete
  4. படித்தவுடன் கண்களில் நீர் நிரம்புகிறது.

    ReplyDelete
  5. நன்றி தோழன் மபா, எஸ்.கா, சித்ரா, டி.ஆர்.அஷோக், அழகன் மற்றும் மதுமிதா

    ReplyDelete
  6. எல்லாம் செய்யலாம் ..செய்த அனைத்தும் இல்லாமலும் போகலாம் ..

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates