Saturday 3 April 2010

கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 16



இது ஒரு திங்கட் கிழமை அன்று நடந்தது. அடுத்து வந்த வாரத்தில் செவ்வாய் கிழமையின் போது, மதிய தூக்க வேளையில், நான் என் நண்பர்களிலேயே மூத்தவரான லூயி கார்மெலோ கொரியாவுடன் பம்பரம் விட்டு கொண்டிருந்த போது பொழுதாகும் முன்னரே தூங்குபவர்கள் எழுந்து ஜன்னலில் இருந்து எட்டிப் பார்ப்பது கண்டு நாங்கள் வியந்தோம்.
அப்போது, ஆளரவமற்ற தெருவில் ஒரு பெண் கராறான் இரங்கல் உடையில், செய்தித்தாளில் பொதிந்த வாடிய பூங்கொத்தை தாங்கிய 12 வயது பெண்ணுடன் வருவதை பார்த்தோம். சுட்டெரிக்கும் சூரியனிடம் இருந்து தங்களை கறுப்பு குடை கொண்டு பாதுகாத்தனர்; அவர்கள் கடந்து செல்வதை வேடிக்கை பார்க்கும் மக்களின் மரியாதை கெட்டத்தனத்தை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
கடந்து போவதை ஜன்னல் வழி ஒரு முழுத்தெருவினால் வேடிக்கை பார்க்கப்படும் ஒற்றைக்கனவைப் போல் இக்காட்சி என்னை பல ஆண்டுகள் தொடர்ந்தது; என் கதை ஒன்றில் எழுதி நான் அதை ஆவியோட்டி சமாளிக்கும் வரை. ஆனால் அந்த பெண் மற்றும் சிறுமியின் கொந்தளிப்பு நிலையை அல்லது குலையாத தன்மானத்தை அந்நாளில் அம்மாவுடன் வீட்டை விற்க சென்று அதே ஆளரவமற்ற தெருவில் அதே பயங்கர வேளையில் நடப்பது எண்ணி அதிர்ச்சி அடையும் வரை நான் உணர்ந்திருக்கவில்லை என்பதே உண்மை. “ நானே அத்திருடன் என்று உணர்கிறேன்”, நான் சொன்னேன். அம்மா என்னை புரிந்து கொள்ளவில்லை. சொல்வதானால், மரியா கன்சிகுராவின் வீட்டை நாங்கள் கடக்கும் போது, தோட்டாத் துளை மூடப்பட்ட தடயம் அப்போது கூட தெரிந்த கதவை அவள் கடைக்கண்ணால் கூட பார்க்கவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின் அவளுடனான அப்பயணத்தை நினைவு கொள்ளும் போது அவள் அந்த துயர நிகழ்வை நினைத்துப் பார்த்தாள். ஆனால் அதை மறக்க தன் ஆன்மாவையே விட்டுக் கொடுத்திருப்பாள் என்பதை உறுதி செய்தாள். பெல்ஜியக்காரன் என்று மேலும் நன்றாக அறியப்பட்ட டான் எமிலியோ வாழ்ந்த வீட்டை நாங்கள் கடக்கையில் இது மேலும் வெளிப்படையாகியது; டான் எமிலியோ முதல் உலகப் போரில் நார்மண்டி கண்ணி வெடிப்பகுதியில் இரண்டு கால்களின் பயன்பாட்டையும் இழந்தவர்; மேலும் ஒரு பெந்தேகோஸ்து ஞாயிற்றுக்கிழமை அன்று தங்க சயனைடின் நறுமண புகைகொண்டு ஞாபகத்தின் சித்திரவதைகளில் இருந்து தப்பினார். எனக்கு ஆறு வயதுக்கு மேல் இருந்திருக்காது; ஆனால் ஏதோ அச்செய்தி ஏற்படுத்திய தடுமாற்றம் நேற்று காலை ஏழு மணிக்கு நிகழ்ந்தது போல் நினைவுள்ளது. அச்செய்தி எந்தளவுக்கு நினைவில் பதிந்திருந்தது என்றால், வீட்டை விற்க அம்மாவுடன் நகரத்துக்கு திரும்பிய போது 20 வருடங்களுக்கு பின் அம்மா தன் மவுனத்தை கடைசியாக கலைத்தாள். “பாவம் அந்த பெல்ஜியக்காரன்”, பெருமூச்சுடன் சொன்னாள், “ நீ சொன்னது போலவே அவர் பிறகு செஸ் ஆடவே இல்லை”
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates