Tuesday 27 April 2010
நீயில்லாத அவ்விரவு
நீயில்லாத அவ்விரவு
பனிப்பொழிவால் நிரம்பி இருந்தது
அடிக்கடி ஜன்னலில் புலப்படும் வானம்
தண்ணீரில் விந்து கரைவது போல்
கோடுகளுடன் மெல்லமெல்ல விரியும் வானம்
குப்பைத்தொட்டி நாய்க்குட்டியின் ஊதிப்போன செந்நிற வயிறு போல்
ஜன்னல் கண்ணாடி எங்கும் கோடுகள் நீட்டி இணையும்
ரத்தம்
ஜன்னல் கண்ணாடி குருடாகிறது
கனிந்த மாம்பழம் ஒன்று மஞ்சளாய்
ஜன்னல் மேல் வழிந்து உருண்டு மறைந்த போது
எட்டிப்பார்த்த என்னைச் சுற்றி எங்கும்
கொழுத்துத் துணுக்குகள் பிசிபிசுப்பாய் படர்ந்த
சிவப்புத் தோல்
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
இதைத்தான் பசலை நோய்னு அந்தக்காலத்துல சொல்லியிருப்பாங்களோ?
ReplyDelete