Wednesday 12 May 2010

கண்காணிப்பின் அறிவுரை




நிலா சாய்ந்ததும்
கிளைகள் களைத்து சாய்வதும்
நாய்களின் ஊளையும்
இரவு நேரத்தின் தனித்த காலடிச் சத்தமும்
நீ துளைத்து பார்ப்பதும்
மிகத் துல்லியமாக தெரிவது
உனக்கு புரியவில்லை

இருந்தாலும் சொல்கிறேன்

இரவு பதினொன்றரைக்கு
மொட்டைமாடி மூலையில்
சிறுநீர் கழிப்பது வேண்டாம்

மழைநீர் வடியும் ஓட்டை உள்ள
பாசி படிந்த பகுதியில்
அரையடி நீள பாம்பு ஒன்று
பளிச்சென்ற கருநீலத்தில்
நெளிந்து செல்வது கண்டேன்
குத்திட்டு அமர்ந்து நீ பாதங்கள் நகர்த்தும் போது
உன் பெருவிரல் அருகே
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates