Friday 14 May 2010

பசியும் பிரார்த்தனையும்






தேவாலய மணி ஒலிப்புக்கு
படுத்தபடி
பசித்த பூனை நெட்டி முறித்தது

கண்மூடியிருக்க
தேய்ந்து காற்றில் தோயும் கனத்த ஓசைகளிடம்
முறுக்கி
கைத்தூக்கி பிரார்த்திக்கும் பாணியில்

முடிவில்
துழாவி நீந்தி வேதாகாம ஒலி நாடாவுக்கு
ஏதோ சொல்லியது

கழூத்துமணி ஒருபுறம்
விடாமல் கிலுகிலுக்க
Share This

2 comments :

  1. இந்தப் பூனையும்
    பைபிள் படிக்குமா?

    ReplyDelete
  2. இந்தக் கவிதையை பல வழிகளில் இனைத்துப் பார்க்க முடியும் போல தோன்றியது. உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

    எனக்கு தோன்றியது:

    கழூத்துமணி ஒருபுறம்
    விடாமல் கிலுகிலுக்க
    கைத்தூக்கி பிரார்த்திக்கும் பாணியில்
    துழாவி நீந்தி வேதகாம ஒலிநாடாவுக்கு
    முறுக்கி
    படுத்தபடி
    பசித்த பூணை நெட்டி முறித்தது.

    முடிவில்
    தேவாலய மணிஒலிப்புக்கு
    கண்மூடியிருக்க
    தேய்ந்து காற்றில் தோயும் கனத்த ஒசைகளிடம்
    ஏதோ சொல்லியது.

    சர்வோத்தமன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates