Tuesday 8 June 2010

அரசு தூதுவர் - ஜேன் ஹெர்ஷ்பீல்டு

சொல்வனத்தில் வெளியாகி உள்ள எனது மொழியாக்க கவிதை














நம் வாழ்வுகளில் நமக்கு ஒன்றுமே தெரியாத

ஒருநாள் அறையில், ஒரு சிறு எலி.

ரெண்டு நாள் கழித்து, ஒரு பாம்பு.

அது, நான் நுழைவதை பார்த்து,

தன் உடலின் நீள்வரியை

படுக்கைக்கு கீழே உதறியது,

பிறகு ஒரு சாதுவான வீட்டு செல்லப்பிராணியை போல் சுருண்டு கொண்டது.


அது எப்படி வந்தது அல்லது வெளியேறியது என்று எனக்கு தெரியாது.

பின்னர் மின்கைவிளக்கு கொண்டு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.


ஒரு வருடமாய் நான் கவனித்தேன்

ஏதோ ஒன்று – பீதி? மகிழ்ச்சி?மரணத்துயரம்? –

என் உடலில் நுழைந்து வெளியேற.


அது எப்படி உள்ளே வந்தது என்பது தெரியாமல்

அது எப்படி வெளியே போனது என்று தெரியாமல்.


வார்த்தைகளால் அடைய முடியா இடத்தில் அது தொங்கியது

வெளிச்சம் செல்ல முடியா இடத்தில் அது உறங்கியது.

அதன் வாசனை பாம்பைப் போலவோ எலியைப் போலவோ இல்லை,

புலன்நுகர்ச்சியாகவோ புலனடக்கமாகவோ இல்லை.

திறப்புகள் உள்ளன

அவற்றின் ஊடே

மணி கட்டப்பட்ட கால்நடை கூட்டங்கள் விருப்பத்துக்கு பயணிக்கும்,

நீண்ட கால்களுடன், தாகத்தில், அந்நிய தூசால் மூடப்பட்டு.

மேலும் படிக்க -

ஜேன் ஹிர்ஷ்பீல்டின் அறிமுகக் குறிப்பு மற்றும் பேட்டி
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates